மதுரை: நித்தியானந்தா தலைமறைவாய் இருந்து கொண்டு நீதித்துறை அமைப்புக்கே சவால் விடுகிறார் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். முதலில் நித்தியானந்தாவை நீதிமன்றத்தில் ஆஜராக சொல்லுங்கள். நித்தியானந்தா சொத்துக்களை இந்தியன் ஜூடிசியல் பாதுகாக்க வேண்டுமா? என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். நித்தியானந்தாவின் பெண் சீடர் சுரேகா தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்து இருந்தார்.