இதையடுத்து நேற்று முன்தினம் குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைக்குப்பின் ஒடுகத்தூர் ஆத்துமேடு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து, குழந்தையை கொன்று புதைத்தது தொடர்பாக ஜீவா, அவரது மனைவி டயானா மற்றும் ஜீவாவின் தாய் பேபி ஆகிய 3 பேரையும் நேற்று அதிகாலை 3 மணியளவில் போலீசார் பிடித்தனர். அதேபோல், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த ஏரியூர் பகுதியை சேர்ந்த சேர்பாடி ஊராட்சி செயலாளர் உமாபதியையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து, ஜீவா, அவரது மனைவி டயானாவை போலீசார் கைது செய்தனர்.