திருவண்ணாமலை: வந்தவாசி அடுத்த பர்வதம்பூண்டி கிராமத்தில் நாட்டுத் துப்பாக்கி வெடித்து குண்டு பாய்ந்ததில் விவசாயி படுகாயம் அடைந்துள்ளார். உரிமம் பெறாமல் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி வெடித்ததில் தொடையில் குண்டு பாய்ந்து பெருமாள் படுகாயம் அடைந்தார். விவசாயி பெருமாள் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.