கிறித்துவ சமூகத்தினர் அதிகம் வசிக்கும் மிசோரமில் தேவாலயங்களுக்கு செல்ல வேண்டி உள்ளதால் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற வேண்டும் என அரசியல் கட்சிகள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஆனால் வாக்கு எண்ணுவதற்கும், தேவாலயம் செல்வதற்கும் தொடர்பில்லை என்பதால் தேதியில் மாற்றமில்லை என மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மிசோரமை சேர்ந்த என்ஜிஓ குழுவினர் இதேகோரிக்கையை வலியுறுத்தி உள்ளனர். இதற்காக டெல்லி சென்றுள்ள அவர்கள் தலைமை தேர்தல் ஆணையரை இன்று சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.