இதை ரத்து செய்யக்கோரி தெலுங்குதேசம் கட்சி தேர்தல் முகவர் சேஷகிரி ராவ் நம்பூரி தாக்கல் செய்த 2 மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு விசாரித்தது. அப்போது இவிஎம் உடைக்கப்படும் வீடியோவை பார்த்த நீதிபதிகள், ‘இந்த வழக்கில் எம்எல்ஏவுக்கு முன்ஜாமீன் வழங்கியது இந்த வீடியோவை நீங்கள் பார்த்தவுடன், இது முற்றிலும் தவறான உத்தரவு என்பதை காண்பீர்கள். இது நீதித்துறையின் கேலிக்கூத்தாகும். எனவே இன்று எம்எல்ஏ ராமகிருஷ்ண ரெட்டி வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழையவோ அல்லது அதன் அருகில் இருக்கவோ கூடாது’ என்று உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஜூன் 6ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.