அதன்படி நான் ரூ.10 லட்சம் கொடுத்து அந்த நகைகளை மீட்டேன். அந்த நகையின் மீது மேலும் நான் ரூ.2.39 லட்சம் கொடுத்தேன். பிறகு அவர் அடுத்தடுத்து நகைகளை எனது கடையில் அடகு வைத்தார். இதனிடையே, சந்தேகத்தின் பேரில், அவர் அடகு வைத்த நகைகளை சோதனை செய்த போது, அனைத்தும் போலி நகைகள் என தெரியவந்தது. பிறகு மீண்டும் என்னை தொடர்பு கொண்டு 200 கிராம் நகைகள் கொண்டு வரவதாக கூறினார். நான் அந்த நகைகளை கொண்டு வரும் போது போலீசாரிடம் பிடித்து கொடுத்துவிடலாம் என்று முடிவு செய்தேன். அதன்படி அவர் கடந்த 26.8.2023 அன்று 200 கிராம் நகையுடன் எனது கடைக்கு வந்தார்.
உடனே நான் போலீசாருக்கு தகவல் அளித்து சீனி ஜாபர் அலியை பிடித்து கொடுத்தேன். அதன்பிறகு ஓட்டேரி போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யாமல், பேரம் பேசி அடகு வைத்த போலி நகைக்கான பணத்தை கொடுத்துவிடுவதாக குற்றவாளியை அனுப்பி வைத்தனர். ஆனால் இதுவரை அடகு வைத்து நகைகான பணத்தை சீனி ஜாபர் அலி திரும்ப கொடுக்கவில்லை. அவர் மீது புகார் அளித்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்த நபர் மீது நான் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க ஓட்டேரி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.