இதுதான் மோடியின் உறுதி மொழி. நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எங்கு நடந்தாலும் அது மனதை பாதிக்கிறது. ஆனால், காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ராஜஸ்தானில் அதே போன்ற குற்றங்கள் அதிகமாக நடக்கின்றன. தேர்வாணைய தேர்வுகளுக்கான வினாத்தாள்களை ரகசியமாக வெளியிடும் கும்பல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டு உதய்ப்பூரில் டெய்லர் கன்னையா லால் 2 பேரால் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இதை கொலையாளிகள் வீடியோவாக எடுத்து வெளியிட்டனர். இஸ்லாம் குறித்து இழிவாக கருத்து தெரிவித்ததற்கு பழிவாங்க இந்த செயலை செய்துள்ளனர். இதில் கூட வாக்குகளுக்காக காங்கிரஸ் பயப்படுகிறது. பாஜ ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு அளி ப்படும்’’ என்றார்.
*முதல்வர் வேட்பாளர் யார்?
சித்தோர்கார் பொதுக்கூட்டத்தில் முதல்வர் வேட்பாளராக கட்சியின் மூத்த தலைவர் வசுந்தரா ராஜே பெயரை மோடி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எந்த அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை.