ஊழல் வழக்குகளில் இம்ரான் கான் மீண்டும் கைது

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான்(71) பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்த போது பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக அவர் மீது 120க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் தோஷகானா ஊழல் வழக்கில் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட போதும் வேறொரு வழக்கில் அவர் சிறையில் உள்ளார். இந்நிலையில் தோஷகானா ஊழல் வழக்கு, அல்-காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்குகளில் இம்ரான் கானுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்து பாகிஸ்தான் ஊழல் தடுப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதையடுத்து 2 வழக்குளில் இம்ரான் கான் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

Related posts

லஞ்சம் வாங்கிய பண்ருட்டி நகராட்சி உதவியாளர் கைது

உத்தரபிரதேசத்தில் கூட்ட நெரிசலில் 121 பேர் இறந்த நிலையில் ஆன்மிக நிகழ்ச்சி நடத்திய சாமியார் தலைமறைவு

“அடுத்த 20 ஆண்டுகளுக்கும் பாஜக ஆட்சி தான்” – மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச்சு