டெல்லி: ஜிஎஸ்டி வரியில் இருந்து தொகுதி மேம்பாட்டு நிதிக்கு ஒன்றிய அரசு விலக்கு அளிக்க வேண்டும் என மக்களவையில் சுப்பராயன் எம்.பி. கோரிக்கை வைத்துள்ளார். பட்ஜெட் விவாதத்தின் மீது பதிலளித்து பேசும்போது நிதி அமைச்சர் அறிவிப்பை வெளியிட வேண்டும். ஊழலைப் பற்றிப் பேச ஒன்றிய பாஜக அரசுக்கு தார்மீக அருகதை இல்லை. தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டை ஒன்றிய அரசு பின்பற்ற வேண்டும் எனவும் திருப்பூர் எம்.பி. சுப்பராயன் பேசியுள்ளார்.