பின்னர் வெளியே வந்த பய்யாவுல கேசவலு கூறுகையில், ‘சந்திரபாபு நாயுடுவுக்கு மின்விசிறி வசதி கூட செய்து தரப்படவில்லை. மனஉளைச்சல் மற்றும் அதிக வெப்பம் காரணமாக உடலில் நீர்சத்து குறைந்து உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவர்களிடம் ெதரிவித்து, தனக்கு சிறந்த வசதிகளை செய்து தரும்படி சந்திரபாபு நாயுடு கேட்டு கொண்டுள்ளார்.
உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சந்திரபாபு நாயுடுவை பாதிப்படைய செய்ய மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் சந்திரபாபு நாயுடுவுக்கு என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் அவரது குடும்பத்தினரும், கட்சியினரும் உள்ளனர்’ என்றார்.