தெலுங்கானா: திறன் மேம்பாட்டு பயிற்சி கழக ஊழல் வழக்கில் ஜாமின் வழங்கி ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திறன் மேம்பாட்டு பயிற்சி கழக ஊழல் வழக்கில் கடந்த செப்டம்பர்.9ம் தேதி சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். 53 நாட்கள் சிறையில் இருந்த சந்திரபாபு நாயுடுவுக்கு கடந்த 31ம் தேதி ஆந்திர ஐகோர்ட் இடைக்கால ஜாமின் வழங்கியது. நவம்பர் .28ல் ராஜமுந்திரி சிறை கண்காணிப்பாளர் முன் சந்திரபாபு நாயுடு சரணடைய வேண்டும் என இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. நவ.28ல் சரணடைய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ஜாமின் கோரி சந்திரபாபு நாயுடு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சந்திரபாபு நாயுடு சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஆந்திர ஐகோர்ட் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.