மாநகராட்சி இன்ஜினியரின் சட்டையை பிடித்து ‘பளார்’ விட்ட பெண் எம்எல்ஏ

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் மீரா-பயந்தர் ெதாகுதி சுயேச்சை ெபண் எம்எல்ஏவும், முன்னாள் மேயருமான கீதா ஜெயின் என்பவர், மாநகராட்சி பொறியாளர் ஒருவரின் சட்டையை பிடித்து கன்னத்தில் பளார் என்று அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பருவமழை தொடங்கி உள்ள நிலையில் குறிப்பிட்ட இடங்களில் இருக்கும் கட்டிடங்களை இடித்ததற்காக, மாநகராட்சியின் இரண்டு பொறியாளர்களை திட்டினார். மேலும் கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தியதால் குடியிருப்புவாசிகள் தெருக்களில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

எனவே கட்டிடங்களை இடிப்பதற்கான முன் அனுமதியை காட்டுங்கள் என்றும், உங்களுக்கு இந்த அதிகாரம் இல்லை என்றும் கூறி, பொறியாளர் ஒருவரை கன்னத்தில் அறைந்தார். இந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. இந்த விஷயம் குறித்து மாநகராட்சி கமிஷனர் திலீபை தொலை பேசியில் தொடர்பு கொள்ள முயன்றும், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

Related posts

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு

எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு!

துரோகத்தின் மொத்த உருவமே அண்ணாமலைதான்: எடப்பாடி பழனிசாமி காட்டம்!