கொரோனா விதிமுறை மீறல் ஆம்ஆத்மி எம்பி சஞ்சய் சிங் சரண்

சுல்தான்பூர்: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங். கடந்த 2021ம் ஆண்டில் கொரோனா விதிமுறைகளை மீறியது தொடர்பாக உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூரில் வழக்கு உள்ளது. அங்கு ஆம்ஆத்மி கட்சியின் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் சல்மா பேகத்திற்கு ஆதரவாக ஹசன்பூர் கிராமத்தில் சஞ்சய்சிங் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடத்தினார். இந்த வழக்கில் சஞ்சய் சிங் எம்பி ஆஜராகாததால் அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து சுல்தான்பூர் சிறப்பு எம்பி, எம்எல்ஏ வழக்கை விசாரிக்கும் மாஜிஸ்திரேட் ஷூபம் வர்மா உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று சஞ்சய் சிங் எம்பி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இதையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

Related posts

காவல்துறை சார்பில் ரூ.47.5 கோடி செலவில் புதிய கட்டிடங்களை காணொலியில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாயாருக்கு பஸ் இயக்க தாமதம்; பயணிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு

வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 280ஆக உயர்வு..!!