மேற்கு வங்கத்தில் 6 மாத குழந்தை உட்பட 3 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் 3 பேரும் உருமாறிய புதிய வகையான ஜேஎன்1 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது உறுதி செய்யப்படவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தை பீகார் மாநிலத்தை சேர்ந்தது. இந்த குழந்தைக்கு கொல்கத்தாவில் உள்ள எம்சிஎச்கே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.