6 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று

புதுடெல்லி: ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘நேற்று காலை 8 மணி வரையிலான 24மணி நேரத்தில் புதிதாக 640 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையானது 2997 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதித்த கேரளாவை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் 6 மாத குழந்தை உட்பட 3 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் 3 பேரும் உருமாறிய புதிய வகையான ஜேஎன்1 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது உறுதி செய்யப்படவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தை பீகார் மாநிலத்தை சேர்ந்தது. இந்த குழந்தைக்கு கொல்கத்தாவில் உள்ள எம்சிஎச்கே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

Related posts

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்: வரும் 5ம் தேதி போராட்டம் நடத்த முடிவு

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி