புதுடெல்லி: ஒன்றிய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தனது டிவிட்டர் பக்கத்தில் தனக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், அவர் கடந்த சில நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா தொற்றை தொடர்ந்து மும்பையில் நடந்த `இந்தியா ஸ்டீல் 2023’ நிகழ்ச்சியில் அமைச்சர் சிந்தியா பங்கேற்கவில்லை.