சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு விளக்கம் அளிக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் 5000 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த துண்டு பிரசுரங்களை வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தொடர்பாக பேரவையில் எடப்பாடி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.