பீகார்: புதியவகை ஜெ.என்.1 கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை பீகார் அரசு விதித்துள்ளது. மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன், அத்தியாவசிய மருந்துகளை கையிருப்பில் வைக்க பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது. காய்ச்சல், இருமல், சுவாச பிரச்னை இருப்போருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள பீகார் அரசு உத்தரவிட்டது.