சென்னை: கொரோனா முடிந்து 3ஆண்டுகளாகியும் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தாமல்இருப்பது ஒன்றியஅரசு தனதுகடமையை புறக்கணிக்கும் செயல் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பை மட்டுமல்ல அத்துடன் சேர்ந்து ஜாதிவாரி கணக்கெடுப்பையும் ஒன்றிய அரசு நடத்த வேண்டும். மாநிலங்கள் சர்வே என்ற பெயரில் கருத்துக்கணிப்பை நடத்தி அதன்படி இடஒதுக்கீடு வழங்கினால் நீதிமன்றம் ரத்து செய்ய வாய்ப்புள்ளது என முதல்வர் தெரிவித்தார்.