எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், ஆ.கிருஷ்ணசாமி, எஸ்.சந்திரன், டி.ஜெ.கோவிந்தராஜன், கூடுதல் பதிவாளர் மு.முருகன் துணைப் பதிவாளர்கள் த.செல்வி, சி.வி.கருணாகரன், இரா.ரவி, சார்பதிவாளர்கள் விஜய சரவணன், விஜய வேலன், சுரேஷ்குமார், சண்முகம், இளங்கோவன் முன்னிலை வகித்தனர். விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வங்கி கடன் உதவிகளையும், சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களையும், கூட்டுறவுத்துறை சார்பாக நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கி பேசினார்.
அவர் பேசியதாவது: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் 2022-23ம் ஆண்டில் 167 பயனாளிகளுக்கு ரூ.91.30 லட்சம் அளவிற்கு பொருளாதார மேம்பாட்டு கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. 2023-24ம் ஆண்டில் 58 பயனாளிகளுக்கு ரூ.61 லட்சம் அளவிற்கு பொருளாதார மேம்பாட்டு கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 2022-23ம் ஆண்டில் 36408 விவசாயிகளுக்கு சுமார் 10351.454 மெ.டன் அளவிற்கு உரங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் நடத்தப்படும் 1113 நியாய விலைக் கடைகள் மூலம் 611492 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக மாதம் ஒன்றிற்கு சுமார் 9940 மெ.டன் அரிசி விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
* 274.44 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி
திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.274.44 கோடி பயிர்கடன் தள்ளுபடி செய்து சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால், 31,009 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.