இதனையடுத்து தயாரிக்கும் சாக்லேட்டுகளை மாற்று இடத்தில் வைக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் கரடி நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனையடுத்து ஒளிரக்கூடிய ஸ்பீக்கருடன் சந்தைக்கடை போல் மக்கள் சத்தத்தை பதிவு செய்து பென்டிரைவ் மூலம் ஒலி பரப்பினார். அப்போது அந்த பகுதியில் வந்த கரடி கூட்டம் மக்கள் அதிகம் உள்ளதாகவும், வண்ண விளக்குகள் எரிவதால் சாக்லேட்டுகளை ருசிக்க முடியாது என்று திரும்பிச்சென்றுள்ளன. அதன்பின்னர் கரடிகள் தொழிற்சாலைக்கு வருவதில்லை என்று உரிமையாளர் தெரிவித்தார்.