நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள காட்டேரி அணை பகுதி சாலையோரத்தில் சுமார் 4 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டுமாடு ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு இன்று காலை கிடைத்த தகவலின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த காட்டுமாட்டின் இடது நெற்றியில் துப்பாக்கி தோட்டா பாய்ந்தததற்கான அடையாளம் இருப்பதைக் கண்டறிந்து, கூறாய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.