டெல்லி: சமையல் எரிவாயு மானியத்தை அடுத்த ஓராண்டுக்கு நீட்டிக்க ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உஜ்வாலா யோஜனா பயனாளிகளுக்கான எரிவாயு சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்கும் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு மார்ச் 31 வரை திட்டத்தை நீட்டிப்பு செய்ய ரூ.12,000 கோடி ஒன்றிய அரசு ஒதுக்கியது.