மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் உள்ள அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோயிலில் அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தனது துணைவியாருடன் நேற்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் அளித்த பேட்டி: குக்கர் சின்னம் முடக்கப்பட்டு விட்டதாக என்ற வதந்திகளை நம்பி விட வேண்டாம். குக்கர் சின்னம் எங்களிடம் தான் உள்ளது. விரைவில் நல்ல செய்தி வரும். அரசியல் ரீதியாக நானும், ஓபிஎஸ்சும் இணைந்து செயல்படுகிறோம். நாடாளுமன்ற தேர்தலுக்கு சில கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசி வருகிறோம். கூட்டணி முடிவானவுடன் தெரியப்படுத்துவேன். இவ்வாறு அவர் கூறினார்.