இது குறித்து காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பதிவில்,‘‘பாஜ மூத்த தலைவர்களான அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் அத்வானி ஆகியோர் இதனை ஒருபோதும் செய்யவில்லை. ஆனால் பிரதமர் மோடி இவ்வாறு செய்வது அவர் வகிக்கும் உயர் பதவியை இழிவுபடுத்துகிறது.
மாநிலங்களவையிலும் பிரதமர் இன்று (நேற்று) இதே போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவார் என்பதில் சந்தேகமில்லை. பாதுகாப்பின்மை மற்றும் சிக்கல்கள் காரணமாக இதுபோன்று பேசுகிறார். அவர் மனக்குழப்பத்தில் இருக்கிறார். இது நேருவை அரசியல் ரீதியாக அல்ல, தனிப்பட்ட முறையில் மிக கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மக்களவையில் பிரதமர் மோடியின் கடைசி உரை என்ற முடிவுக்கு நாட்டு மக்கள் அதிலும் குறிப்பாக இளைஞர்கள் வந்துவிட்டனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.