சென்னை: சென்னையில் அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பேச்சாளர் மகாவிஷ்ணு தலைமறைவாகியுள்ளார். சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து விசாரிக்க போலீசார் தொடர்பு கொண்டபோது மகாவிஷ்ணுவின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. சென்னை போலீசார் கேட்டுக்கொண்டதன் பேரில் மகாவிஷ்ணு அறக்கட்டளையில் திருப்பூர் போலீஸ் சோதனை நடத்தினர். திருப்பூரில் உள்ள அறக்கட்டளை அலுவலகத்திலும் மகாவிஷ்ணு இல்லை. மகாவிஷ்ணுவை தொடர்பு கொள்ள இயலாததால் அவர் தலைமறைவாகி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.