சென்னை: மூடநம்பிக்கையை பரப்பும் வகையில் பேசிய மகாவிஷ்ணு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 3 நாள் போலீஸ் காவல் முடிந்த நிலையில் மகாவிஷ்ணு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சென்னை அசோக் நகர் அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளியை அவமதிக்கும் வகையில் பேசியதாக மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டார். இதையடுத்து திருப்பூரில் உள்ள அறக்கட்டளைக்கு மகாவிஷ்ணுவை அழைத்துச் சென்று போலீஸ் விசாரணை நடத்தியது. மகாவிஷ்ணுவின் வங்கிக் கணக்கு பரிவர்த்தனை தொடர்பாகவும் போலீஸ் விசாரணை நடத்தியுள்ளது.