சர்ச்சைப் பேச்சாளர் மகாவிஷ்ணு விவகாரம்: அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

சென்னை: சர்ச்சைப் பேச்சாளர் மகாவிஷ்ணு பேசிய விவகாரத்தில் நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் நடந்த சொற்பொழிவு நிகழ்ச்சியில் மகாவிஷ்ணு சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் எழுந்தது. மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசிய மகாவிஷ்ணு கடந்தவாரம் கைது செய்யப்பட்டார். சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்ட விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தலைமையிலான குழு விசாரணை நடத்தியது. விசாரணை முடிந்ததை அடுத்து தலைமைச் செயலாளரிடம் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிக்கையை சமர்ப்பித்தார்.

 

Related posts

மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு விவகாரம் சென்னை முதன்மை கல்வி அலுவலரை பணியிடமாற்றம் செய்ய பரிந்துரை

கேரளாவில் நிபா வைரஸ் பரவல் எதிரொலி தேனி, குமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு

சென்னையில் வேலை வாங்கி தருவதாக அழைத்து வந்து வங்கதேச இளம்பெண்ணை பாலியலில் தள்ளிய கொடூரம்