சென்னை: காண்டூர் கால்வாய் பராமரிப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து 7000 கனஅடி இருப்பதால் நீர் திறக்க வேண்டும். பரம்பிக்குளம் அணையில் இருந்து திருமூர்த்தி அணைக்கு 1000 கன அடி நீர் திறக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.