புழல் பகுதியில் இரவில் தொடர் மின்தடை: பொது மக்கள் கடும் அவதி

புழல்: புழல் பகுதியில் இரவில் தொடரும் மின்தடையால், பொது மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், புழல் 23 மற்றும் 24வது வார்டு பகுதிகளான புழல், காவாங்கரை, கண்ணப்பசாமி நகர், பாலாஜி நகர், மேக்ரோ மார்வெல் நகர், அண்ணா நினைவு நகர், கடைவீதி, சக்திவேல் நகர், மகாவீர் கார்டன், மெர்சி நகர், திருநீலகண்ட நகர், மாரியம்மன் நகர் உள்பட பல்வேறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகலில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.

மேலும், இரவு நேரங்களிலும் தொடர்ந்து மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் நேற்று முன்தினம் இரவு மேற்கண்ட பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. நீண்ட நேரமாகியும் மின்சாரம் வினியோகிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியினர் மிகவும் அவதிக்குள்ளானார்கள். குறிப்பாக, குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். எனவே, புழல் பகுதிகளில் மின் வினியோகத்தை சீரமைத்து, தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரிய உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோருகின்றனர்.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்