Saturday, October 5, 2024
Home » புழல் பகுதியில் இரவில் தொடர் மின்தடை: பொது மக்கள் கடும் அவதி

புழல் பகுதியில் இரவில் தொடர் மின்தடை: பொது மக்கள் கடும் அவதி

by Ranjith

புழல்: புழல் பகுதியில் இரவில் தொடரும் மின்தடையால், பொது மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், புழல் 23 மற்றும் 24வது வார்டு பகுதிகளான புழல், காவாங்கரை, கண்ணப்பசாமி நகர், பாலாஜி நகர், மேக்ரோ மார்வெல் நகர், அண்ணா நினைவு நகர், கடைவீதி, சக்திவேல் நகர், மகாவீர் கார்டன், மெர்சி நகர், திருநீலகண்ட நகர், மாரியம்மன் நகர் உள்பட பல்வேறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகலில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.

மேலும், இரவு நேரங்களிலும் தொடர்ந்து மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் நேற்று முன்தினம் இரவு மேற்கண்ட பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. நீண்ட நேரமாகியும் மின்சாரம் வினியோகிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியினர் மிகவும் அவதிக்குள்ளானார்கள். குறிப்பாக, குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். எனவே, புழல் பகுதிகளில் மின் வினியோகத்தை சீரமைத்து, தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரிய உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோருகின்றனர்.

You may also like

Leave a Comment

5 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi