நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசின் தலைமை செயலர் ஆக.21ம் தேதி ஆஜராக ஐகோர்ட் கிளை ஆணை..!!

மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசின் தலைமை செயலர் ஆகஸ்ட் 21ம் தேதி ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை தரவேண்டிய பணப்பலனை வழங்காத அதிகாரி மீது நடவடிக்கைகோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. அப்போதைய நகராட்சி நிர்வாக செயலாளராக இருந்த சிவதாஸ் மீனா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுகளை முறையாக நிறைவேற்றாத அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. தேனியை சேர்ந்த ராஜேஷ் அய்யனார் முருகன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

Related posts

மருந்தகத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு

பைக் ரேஸில் தகராறு: இளைஞருக்கு கத்திக்குத்து

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பாக நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் பணிகள் குறித்து அரசிதழில் வெளியீடு