இதன் அடிப்படையில் அந்த நிறுவனத்திற்கு எதிராக வழக்குப்பதிந்த அமலாக்கத்துறை ஆவணங்களுடன் ஆஜராகுமாறு பீட்டருக்கு சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து அவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், இருவருக்கிடையேயான தொழில் பிரச்னையில் தலையிட்டு அமலாக்கத்துறை வழக்குப்பதிந்தது தவறு. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில் சட்ட விரோத பண பரிமாற்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்தது செல்லாது என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, அமலாக்கத்துறையின் நடவடிக்கை நிறுவனத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். இந்த மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை மார்ச் 1ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.