பிரபல கட்டுமான நிறுவன அதிபர் எஸ்.கே.பீட்டர் மீதான வழக்கு ரத்து..!!

சென்னை: அமலாக்கத்துறை சோதனைக்குள்ளான பிரபல கட்டுமான நிறுவன அதிபர் எஸ்.கே.பீட்டர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது. நிறுவனத்தில் முதலீடு செய்த தனக்கு அளிக்க வேண்டிய பங்குத்தொகையை தரவில்லை என்று எஸ்.கே.பீட்டர் மீது புகார் அளிக்கப்பட்டது. பங்குதாரர் ஸ்ரீராம் அளித்த புகாரில் எஸ்.கே.பீட்டர் மீது 6 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்தனர். தங்களுக்கு இடையே சமரசம் ஆகிவிட்டதால் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி எஸ்.கே.பீட்டர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். தங்களுக்கு இடையே சமரசம் ஏற்பட்டுவிட்டதாக ஸ்ரீராம் தரப்பிலும் ஐகோர்ட்டில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

Related posts

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்