டெல்லி: ஆண்டுதோறும் ஜூன் 25ம் தேதி அரசமைப்பு படுகொலை செய்யப்பட்ட தினமாக அனுசரிக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவசர நிலையால் பாதிக்கப்பட்டோருக்கு ஆண்டுதோறும் ஜூன் 25ம் தேதி அஞ்சலி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.