சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் 2ம் நிலை காவலர், தீயணைப்புப்படை வீரர் பணிகளுக்கான உடற்தகுதித் தேர்வு சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடந்து வருகிறது. முதற்கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு, உயரம், மார்பளவு மற்றும் 1500 மீட்டர் ஓட்டம் நடக்க உள்ளது. இன்றும் நாளையும் நடக்கும் உடற்தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் அடுத்தகட்ட தேர்வுக்கு தேர்வர்கள் அழைக்கப்படுவார்கள்