அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: பிரதமர் மோடி, மே 30 முதல் ஜூன் 1ம் தேதி வரை கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் தியானம் மேற்கொள்ளள இருப்பதாக அறிவித்துள்ளார். விவேகானந்தர் பாறை, பகவதியம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களை தடுக்க கூடாது. வியாபாரிகள் கடைகளை மூடும்படி வற்புறுத்தக் கூடாது. இதுகுறித்து காங்கிரஸ் வழக்கறிஞர் அணி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர மனு தாக்கல் செய்தபோது பதிவுத்துறை அதை ஏற்க மறுத்துவிட்டது. எனவே, சுற்றுலா பயணிகளின் நலனை பாதுகாக்கும் வகையில், இந்த வழக்கை தாக்கல் செய்ய அனுமதியளிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.