இந்நிலையில் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் மீஞ்சூர் நகர காங்கிரஸ் சார்பாக ஆளும் ஒன்றிய பாஜக அரசின் அவல நிலையை கண்டித்து தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. துரை.சந்திரசேகர் பேசியுள்ளார். குண்டு பாய்ந்து உயிரிழக்கும் தருவாயிலும் ஹேராம் என்று கூறிய காந்தியே உண்மையான ராம பக்தர். நள்ளிரவில் பெண் ஒருவர் நகைகளுடன் சுதந்திரமாக நடமாட வேண்டும் என்பதே ராமராஜ்ஜியம் என காந்தி எண்ணினார். தற்போதைய பா.ஜ.க. ஆட்சியில் இதுபோல் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியுமா என காங்கிரஸ். எம்.எல்.ஏ. துரை.சந்திரசேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.