வார்தா: மகாராஷ்டிர மாநிலம் வார்தாவில் நேற்று நடைபெற்ற பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் ஓராண்டு நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்,‘‘ இன்று நீங்கள் பார்க்கும் காங்கிரஸ் மகாத்மா காந்தி போன்ற சிறந்த மனிதருடன் தொடர்புடைய கட்சி அல்ல. அந்த கட்சிக்குள் வெறுப்பு ஆவி புகுந்து விட்டது. வெளிநாடுகளில் காங்கிரஸ் தலைவர்கள் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை பேசி வருகின்றனர்.
ஊழல் கட்சி என்றால் அது காங்கிரஸ்தான். அதில் உள்ள குடும்பத்தினர்தான் மிக பெரிய ஊழல்வாதிகள். சிறு,சிறு குழுக்கள் மற்றும் நகர்புற நக்சலைட்டுகள் கட்சியை நடத்துகின்றனர். காங்கிரஸ் கட்சி கணபதி பூஜையை வெறுக்கிறது. நான்(உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வீட்டில்) கணபதி பூஜை ஒன்றில் கலந்து கொண்டேன். அதற்காக என்னை விமர்சித்தனர். கர்நாடகாவில் கணபதி சிலையை கம்பிகளுக்கு பின்னால் அடைத்தனர் ’’ என்றார்.