இதனிடையே பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அவையில் நேற்று பேசியதை தொடர்ந்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது தொடர்பாக மக்களவையில் இன்று காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டம் நடந்தது. அப்போது, சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.அதே சமயம், நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுவதை அடுத்து அனைத்துக் கட்சி எம்பிக்களுக்கும் சபாநாயகர் தேநீர் விருந்து வைக்க உள்ளார். ஆனால் ங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து கண்டித்து சபாநாயகர் ஓம் பிர்லா வைக்கவுள்ள தேநீர் விருந்தில் I.N.D.I.A கூட்டணி கட்சி எம்பிக்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.மேலும் 23 கட்சிகளை சேர்ந்த 142 மக்களவை எம்பிகள் சபாநாயகரின் தேநீர் விருந்தை புறக்கணிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. மேலும் ஆதிர் ரஞ்சன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து I.N.D.I.A. கூட்டணி எம்பிக்கள், நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை நோக்கி பேரணி சென்று அங்கு போராட்டம் நடத்துகின்றனர்.