அதற்கேற்ப சர்மிளா, தெலங்கானா சட்டமன்ற தேர்தலின்போது காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். தனது பிரசாரத்தின்போது பிஆர்எஸ் கட்சி தலைவர் சந்திரசேகரராவை மட்டுமே குறி வைத்து பேசினார். அதற்கேற்ப தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்ற நிலையில் சர்மிளாவை காங்கிரசில் இணைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி டெல்லிக்கு வந்து தங்களை சந்தித்து காங்கிரசில் இணையும்படி கட்சி மேலிடம் அழைப்பு விடுத்தது.
இதையடுத்து நேற்று காலை அவர் ஐதராபாத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி முன்னிலையில் கட்சியில் இணைந்தார். சர்மிளாவுக்கு சால்வை அணிவித்து கார்கே, ராகுல் ஆகியோர் வரவேற்றனர். தாம் நடத்தி வந்த ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியையும் காங்கிரஸில் இணைத்தார் சர்மிளா. மேலும் தனது மகனின் திருமண அழைப்பிதழை சோனியா, ராகுல், மல்லிகார்ஜூன கார்கே ஆகியோருக்கு வழங்கினார்.
இதனிடையே காங்கிரசில் இணைய உள்ள சர்மிளாவுக்கு, விரைவில் ராஜ்யசபா சீட் வழங்க கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆந்திரா, தெலங்கானா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியை வழங்கவும் முடிவு செய்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சர்மிளாவுடன் காங்கிரசில் இணைய உள்ள அவரது ஆதரவாளர்களுக்கும் பொறுப்புகள் வழங்கப்பட உள்ளதாம்.