Tuesday, July 2, 2024
Home » பிற்படுத்தப்பட்ட பிரிவினரை காங்கிரஸ் புறக்கணித்தது: அமித் ஷா பேச்சு

பிற்படுத்தப்பட்ட பிரிவினரை காங்கிரஸ் புறக்கணித்தது: அமித் ஷா பேச்சு

by Ranjith

அகமதாபாத்: பிற்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவருக்கு பிரதமர் ஆவதற்கு வாய்ப்பு வழங்கிய ஒரே கட்சி பாஜ என்று ஒன்றிய அமைச்சர் அமித் ஷா பெருமிதம் தெரிவித்தார். மோடி சமூகத்தினரின் தேசிய மாநாடு அகமதாபாத்தில் நேற்று நடந்தது. இதில், ஒன்றிய அமைச்சர் அமித் ஷா பேசுகையில்,‘‘பிற்பட்ட வகுப்பினரின் நிலைமையை நன்கு புரிந்தவர் மோடி. அதே போன்ற குடும்பத்தில் பிறந்துள்ளதால் அவர்களின் வலியை அவர் நன்கு உயர்வார். பாஜ கட்சி பிற்பட்ட பிரிவினர் பலருக்கு முதல்வர் பதவி வழங்கியுள்ளது.

காங்கிரஸ் கட்சி பிற்பட்டோருக்கு எதுவுமே செய்யவில்லை. மோடி அரசு அவர்களுக்காக பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. தேசிய பிற்பட்டோர் ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட நபரை ஒருவர் இழிவுபடுத்தினால் அது பெரிய விஷயம் இல்லை. ஆனால், பிரதமர் உட்பட ஒட்டுமொத்த சமூகத்தினரையே இழிவுபடுத்துவது நாட்டையே அவமதிப்பதாகும்’’ என்றார்.

You may also like

Leave a Comment

11 − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi