சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் அஸ்லம் பாஷா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லம் பாஷா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கின்ற வகையில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் சையத் இப்ராஹிம், அவர் வகிக்கும் பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்கப்படுகிறார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி, தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள் அன்பரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.