பதிலுக்கு சன்னி குறித்தும் சோனியா காந்தி குறித்தும் தனிப்பட்ட முறையில் தாக்கி பிட்டு பேசினார். இருவரும் அவையின் மைய பகுதிக்கு செல்ல முயன்றனர். இதனால் அவையில் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதன்காரணமாக அவை 30 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், மீண்டும் அவை தொடங்கியதும் பேசிய சன்னி, தங்கள் கோரிக்கைக்காக போராடிய விவசாயிகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் ஒன்றிய அரசு வழக்கு பதிந்ததாக கூறினார்.
இது தவறான தகவல் என்றும் இதற்காக சன்னி மீது உரிமை மீறல் நோட்டீஸ் விடுக்க வேண்டுமெனவும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ வலியுறுத்தினார். இந்த விவகாரத்தால் மீண்டும் அமளி ஏற்பட அவை தொடர்ந்து 2வது முறையாக பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.