சென்னை: ஒன்றிய பா.ஜ.க. அரசால் காங்கிரஸ் நிதி ரூ.265 கோடி திருடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு வைத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் 11 வங்கிக்கணக்குகளை முடக்கியுள்ளன. காங்கிரசை முடக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒன்றிய அரசு செயல்படுவதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.