வயநாடு: காங்கிரஸ் சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 வீடுகள் கட்டித்தரப்படும் என நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த நிலையில் வயநாட்டில் ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார். மிகவும் மோசமான பேரிடர் நிகழ்ந்துள்ளது. வயநாடு மாவட்ட நிர்வாகத்தினரையும், பஞ்சாயத்து நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தினேன். இதுபோன்ற மோசமான நிலையை கேரள மாநிலம் இதுவரை கண்டதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.