சென்னை: காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதற்கு அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தல் பத்திரங்கள் மூலம் வருமானத்தை வாரி குவித்த பா.ஜ.க.வை நீதிமன்றம் கண்டித்ததால் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தோற்றுப் போய்விடுவோம் என்று தெரிந்ததால் மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேர்தல் நேரத்தில் ஆளும் பா.ஜ.க.வின் அரசியல் பழிவாங்கும் போக்கை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு மக்கள் பதிலடி தருவார்கள் என்பதில் சந்தேகமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.