சென்னை: தமிழ்நாட்டில் தொழில்வளத்தை பெருக்க உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தும் முதலமைச்சருக்கு வாழ்த்து என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். எண்ணூர் கோரமண்டல் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரமண்டல் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த 13 நாட்களாக மீனவ மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.