காங்கோ: காங்கோ நாட்டின் கின்ஷாசாவில் பெய்து வரும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 300 பேர் உயிரிழந்தனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 300 உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பெருவெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் 43,750 வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாக காங்கோ அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.