மாநாடு தேதி மாற்றம்; போலீஸ் அனுமதி கேட்டு த.வெ.க மீண்டும் மனு

விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) என்ற நடிகர் விஜய் கட்சியின் முதல் மாநாட்ைட விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி, வி.சாலையில் உள்ள 85 ஏக்கர் இடத்தில் செப்.23ம் தேதி நடத்துவதற்கு அனுமதிகோரி காவல்துறையில் விண்ணப்பித்தனர். இதனை ஆய்வு செய்த காவல்துறையினர் 33 நிபந்தனைகளுடன் மாநாடு நடத்த அனுமதி வழங்கினர். ஆனால் மாநாடுக்கான ஏற்பாடுகளை செய்ய குறைந்த நாட்களே இருந்ததால் அக்டோபர் 27ம் தேதி மாநாடு நடைபெறும் என்று நடிகர் விஜய் நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதனால் மாநாட்டிற்கு மீண்டும் அனுமதி கேட்டு நேற்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விழுப்புரம் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் கூடுதல் எஸ்பியிடம் மனு அளித்தார். பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளரிடம் கூறுகையில், ‘திட்டமிட்டபடி அக்டோபர் 27ம் தேதி மாநாடு நடைபெறும். இதற்கான பணிகள் ஒரு வாரத்தில் துவங்கும். மாநாட்டில் கலந்து கொள்பவரின் விவரங்கள் முறைப்படி கட்சியின் தலைவர் அறிவிப்பார்’ என்றார்.

Related posts

அனுமதியின்றி வேள்பாரி நாவலின் காட்சிகள் படமாக்கப்பட்டால் சட்ட நவடிக்கையை சந்திக்க நேரிடும்: இயக்குநர் ஷங்கர்

கொடைக்கானல் கிளாவரையில் ஏற்பட்ட நிலத்தில் வெடிப்பு தொடர்பாக அதிகாரிகள் நாளை ஆய்வு: மாவட்ட நிர்வாகம் தகவல்

டெல்லி அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு; 13 துறைகளை கவனிக்கும் முதல்வர் அடிசி: 26, 27ம் தேதிகளில் நம்பிக்கை வாக்கெடுப்பு