அரியானா: நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து அரியானாவில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் காங்கிரசார், பாஜக அலுவலகத்துக்கு பூட்டு போட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.